மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் வீடு திரும்பினார்

வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர், வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் வீடு திரும்பினார்
Published on

சென்னை,

தமிழக துணை முதல் அமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஓ. பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பரிசோதனை முடிந்து சில மணி நேரங்களிலேயே துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வீடு திரும்பினார்.முன்னதாக, கடந்த மே 25 ஆம் தேதி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ . பன்னீர் செல்வம் அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com