592 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் துணை சபாநாயகர் வழங்கினார்

592 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை துணை சபாநாயகர் வழங்கினார்
592 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் துணை சபாநாயகர் வழங்கினார்
Published on

வேட்டவலம்

592 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை துணை சபாநாயகர் வழங்கினார்

வேட்டவலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் வெங்கடாசலம், அனுராதா, பாரதி, ஆகியோர் தலைமை தாங்கினார். வேட்டவலம் பேரூராட்சி மன்ற தலைவர் கவுரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ராஜந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மலர் எழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு 592 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 28 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் செந்தில் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com