குழந்தை இல்லாததால் விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திண்டுக்கல் அருகே குழந்தை இல்லாததால் விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
குழந்தை இல்லாததால் விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி முருகன்நகரை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி திவ்யா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் விரக்தியடைந்த திவ்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திவ்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com