எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாடு: ரூ.351 கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாடு: ரூ.351 கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
Published on

சென்னை,

2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட ரூ.702 கோடியில் 50% நிதியை விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி நிதி ஒதுக்க நிர்வாக அனுமதி அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. அதில் 50 சதவீத தொகையான ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பும் செய்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com