சதுரகிரி மலையேறிய பக்தர் திடீர் சாவு


சதுரகிரி மலையேறிய பக்தர் திடீர் சாவு
x

சதுரகிரி மலையேறிய பக்தர் திடீரென உயிரிழந்தார்.

விருதுநகர்,

சிவகங்கை மாவட்டம் தென்கரையை சேர்ந்தவர் மகா (வயது 55). இவர் தனது உறவினரான முத்துகிருஷ்ணன் என்பவரோடு நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்ய மலையேறினார்.

சின்ன பசுக்களை என்ற இடத்தின் அருகே சென்றபோது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மயக்கம் அடைந்த அவர், சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அடிவார பகுதிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை டோலி கட்டி கீழே கொண்டு வந்தனர்.

பின்னர் அவரது உடல், பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதுரகிரி மலையேறிய பக்தர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story