பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை
Published on

திண்டுக்கல்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையெட்டி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள்.

அதன்படி 12-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. ஆனால் கொரோனா பரவலால் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் விசாகன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com