திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
Published on

5-ம் படை வீடு

முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம்படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு விடுமுறைநாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால், மலைக்கோவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com