முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

விடுமுறை மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக்கோவிலில் புதுமண தம்பதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மலைக்கோவில் அடிவாரத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுவழியில் பக்தர்கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com