"தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தேர்தல் ஆணைய தீர்ப்பால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
"தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏல்க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து சட்டசபை வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி என்ற வரலாற்று சாதனையை படைப்போம். 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கு இந்தத் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com