தருமபுரி: நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

இதன் மூலம் பென்னாகரம் வட்டத்திலுள்ள கிராமங்களில் 1993 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
தருமபுரி: நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமம், நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 16.02.2026 முதல் 26.05.2026 வரை 100 நாட்களுக்கு முறை வைத்து அதாவது முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும் அடுத்த 5 நாட்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கும் தண்ணீர் விட்டு, பின்னர் 5 நாட்களுக்கு நிறுத்தியும் மொத்தம் 7 நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கன அடி தண்ணீரை தலைமை மதகின் வழியாக திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅளள், சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்திலுள்ள 1993 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com