ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் ஈடுபட்டனர்.
ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
Published on

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக 92 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் மாதம்தோறும் சம்பளத்தில் இருந்து சேமிப்பு நிதி மற்றும் மருத்துவப் படியை பிடித்தம் செய்து வந்தனர்.

அந்த நிதியை திருப்பி வழங்கக்கோரி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் துப்புரவு பணிக்காக பயன்படுத்தும் மண்வெட்டி, கூடை மற்றும் உபகரணங்களை அவர்கள் கையில் வைத்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com