தர்மபுரி அருகேவீட்டின் முன்பு தவறி விழுந்து தொழிலாளி சாவு

தர்மபுரி அருகேவீட்டின் முன்பு தவறி விழுந்து தொழிலாளி சாவு
Published on

தர்மபுரி அருகே உள்ள பெரிய மல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கம் (வயது 38). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் வீட்டின் அருகே தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்து மயங்கிய அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கம் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com