சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு
சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு
Published on

நாமக்கல் சின்ன முதலைப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 47). பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சாலையோரமாக நடந்து சென்ற ராஜா திடீரென தவறி சாக்கடை கால்வாயில் விழுந்து விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சித்தாரா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com