பாம்பு கடித்து டிரைவர் பலி

பாம்பு கடித்து டிரைவர் பலி
பாம்பு கடித்து டிரைவர் பலி
Published on

சூளகிரி:

சூளகிரியை அடுத்த சென்னப்பள்ளியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 48). டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது மாந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரை கடித்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com