சேந்தமங்கலம் அருகேகியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் பூசாரி சாவு

சேந்தமங்கலம் அருகேகியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் பூசாரி சாவு
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள பழைய பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூர்த்தி (வயது 60). இவர் அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பூசாரி ஆதிமூர்த்தி, அவருடைய மனைவி அமராவதி (45), மகன் மற்றும் மகள் ஆகியோர் தீக்காயம் அடைந்து உடல் கருகி படுகாயம் அடைந்தனர்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 4 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பூசாரி ஆதிமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com