பள்ளிபாளையம் அருகேகார் மோதி மூதாட்டி பலி

பள்ளிபாளையம் அருகேகார் மோதி மூதாட்டி பலி
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே தாற்காடு மண்டபத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 68). இவருடைய மனைவி சின்னம்மாள் (63). இவர் நேற்று காலை 7 மணி அளவில் அப்பகுதியில் உள்ள கடைக்கு டீ வாங்க நடந்து சென்றார். அப்போது வெப்படையில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று சின்னம்மாள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் சின்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சின்னம்மாளின் பேரன் ஆனந்தபாபு என்பவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த டிரைவர் கார்த்தி (22) என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com