எருமப்பட்டி அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

எருமப்பட்டி அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
Published on

எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள செவந்திபட்டியை சேர்ந்தவர் சடகோபன் (வயது 77). இவருடைய மனைவி சாந்தி. இந்த நிலையில் சடகோபன் அங்குள்ள கட்டபெருமாள் கோவில் வழியாக நடந்து சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் ராஜலிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடகோபன் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடகோபனின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சடகோபன் தோட்டத்து வழியாக நடந்து சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. எனினும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com