மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா எம்.ஜி.கொல்ல அள்ளி பக்கமுள்ள கெங்கவாரத்தை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது 45). இவர் நேற்று முன்தினம் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ராயக்கோட்டை- கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது முருகம்மாள் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com