ஓசூர் அருகே காதல் தோல்வியால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஓசூர் அருகே காதல் தோல்வியால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஓசூர்:

ஓசூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள மல்லசந்திரத்தை சேர்ந்தவர் நவீன்ரெட்டி (வயது 24). இவர் கனடா நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார். அங்கு பணியாற்றியபோது அவருடன் வேலை செய்து வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை நவீன்ரெட்டி காதலித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண் சமீபத்தில் நவீன்ரெட்டியுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. மேலும் அவருடனான காதலை முறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

காதல் தோல்வியில் இருந்த நவீன்ரெட்டி கடந்த 21-ந் தேதி தனது சொந்த ஊரான மல்லசந்திரத்திற்கு வந்தார். அன்று முதல் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்தாராம். இதையடுத்து கடந்த 26-ந் தேதி இரவு தனது வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com