டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் உயிரை மாய்த்து கொண்டதற்கு அலுவலக பிரச்சினை காரணமில்லை என டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
Published on

கோவை,

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை.

கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது:-

கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் மிகவும் வருந்தத்தக்கது. கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்த விஜயகுமாருக்கு ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் கவுன்சிலிங் அளித்துள்ளார்.

அவர் உயிரை மாய்த்து கொண்டதற்கு அலுவலக பிரச்சினை காரணமில்லை. வேலைசுமையோ காரணமில்லை. இது குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com