தபால்துறை மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் தபால்துறை மூலம் வீடு தேடி வந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி கூறி உள்ளார்.
தபால்துறை மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
Published on

தஞ்சாவூர்;

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் தபால்துறை மூலம் வீடு தேடி வந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி கூறி உள்ளார்.

டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ்

தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிர்வாழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமாண் திட்டத்தின் மூலம் தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, ஓய்வூதிய தாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ்சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

வீடு தேடி வரும்

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல்ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்த சேவையை பெறுவதற்கு ccc.cept.gov.in/covid/request, aspx என்ற இணையதளத்தை பயன்படுத்தி கோரிக்கை கொடுத்தால் உங்கள் பகுதி தபால்காரர் உங்களை தேடி வந்து தேவையை பூர்த்தி செய்து தருவார்.எனவே மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com