திண்டுக்கல்; பக்ரீத், முகூர்த்த நாள் எதிரொலி - நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை ரூ.1,700-க்கு விற்பனை

முகூர்த்த நாள் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்; பக்ரீத், முகூர்த்த நாள் எதிரொலி - நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை ரூ.1,700-க்கு விற்பனை
Published on

திண்டுக்கல்,

முகூர்த்த நாள் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,700-க்கு விற்பனையானது. மேலும் வியாபாரம் களைகட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் ஒரு கிலோ கனகாம்பரம் 900 ரூபாய்க்கும், சம்பங்கி 600 ரூபாய்க்கும், முல்லைப்பூ 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com