

சென்னை,
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் லஞ்சப் பணத்துடன் பலர் சிக்கினர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய இயக்குநராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.