பேரிடர் மேலாண்மை பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பாராட்டு

மிக்ஜம் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மை பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பாராட்டு
Published on

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை துணிவுடன் வழிநடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தமிழகத்தில் மிக்ஜம் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு இந்த புயல் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனது சகோதரர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை துணிச்சலுடன் முன்னெடுத்துச் செல்கிறார். அவருக்கும், பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழக மக்களுக்கும் எனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திராவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com