மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு சலுகை வழங்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு சலுகை வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு சலுகை வழங்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
Published on

சென்னை,

கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு, எம்.டி., எம்.எஸ்., போன்ற மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் டாக்டர் பார்க்கவியான், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவ படிப்பில் 1,968 இடங்கள் உள்ளது. இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள இடங்களில் 50 சதவீதம் அரசு டாக்டர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஊக்க மதிப்பெண் வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு டாக்டர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்த டாக்டர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது' என்று கூறியிருந்தார்.

தடை இல்லை

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.தண்டபாணி, அரசு டாக்டர்கள் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளிலும், அணுக முடியாத பகுதிகளிலும் பணிபுரிகின்றனர். அதனால், இவர்களுக்கு இந்த சலுகைகள் வழங்க அரசுக்கு தடை எதுவும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், சத்திக்குமார் சுகுமார குரூப் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அரசு டாக்டர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com