2,800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 2,800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.
2,800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை கிளாக்காடை அடுத்த அரண்மனைபுதூர் வடக்கே உள்ள ஓடையில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அரண்மனை புதூர் வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 200 லிட்டர் கொள்ளளவுள்ள 14 பிளாஸ்டிக் பேரல்களில் 2,800 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இதுதொடாபாக வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com