ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கொரோனாவின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி நடமாடும் கடைகள் மூலமாக மக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு அதற்கான பணிகளையும் செய்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகளும் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரை திறந்திருக்கும் என்றும், தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com