தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் டி.ஜி.பி. உத்தரவு

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை வந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் டி.ஜி.பி. உத்தரவு
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்றும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com