தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம்

கோவில்பட்டியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம்
Published on

கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 28-ந் தேதி ஆலங்குளத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரேமலதா விஜயகாந்திற்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com