

நாங்குநேரி:
நாங்குநேரி சுங்கச்சாவடியில் தே.மு.தி.மு.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.