தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை

வருகிற 18-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நமது கழக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com