வண்டலூரில் தி.மு.க. நிர்வாகி நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை

தி.மு.க. நிர்வாகி ஆராமுதன் மீது அடையாளம் தெரியாத கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
வண்டலூரில் தி.மு.க. நிர்வாகி நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

இதையடுத்து உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆராமுதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தி.மு.க. நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com