"அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது" - அமைச்சர் ரகுபதி பதிலடி

அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
"அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது" - அமைச்சர் ரகுபதி பதிலடி
Published on

புதுக்கோட்டை,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது, 'மத்தியில் ஆட்சி அதிகாரம் பாஜக கையில் உள்ளதால் தமிழகத்தில் எங்கேயாவது சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கிவிட முடியுமா என்று அவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள். அவர்களுடைய கணக்கு எந்த காலத்திலும் நிறைவேறாது. அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும்' என்று கூறினார்.

மேலும், அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியதற்கு, எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com