திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை உறுதி செய்து ஒதுக்கி கொடுப்பதில் திமுக. ஆர்வம் காட்டி வருகிறது. இதனிடையே திமுகவில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்புச்செயலாளார் ஆர்.எஸ்.பாரதியிடம் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை வழங்கினார்.

1984ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின் 9ஆவது முறையாக போட்டியிடுகிறார். ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வென்ற மு.க.ஸ்டாலின் தற்போது 3வது முறையாக அங்கு போட்டியிட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com