தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

சங்கரன்கோவிலில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி.சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜா எம்.எல்.ஏ. இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகேஷ், துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராஜராஜன், கார்த்தி, மணிகண்டன், அன்சாரி, ராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பொன்முத்தையாபாண்டியன் பூசைபாண்டியன், மதிமாரிமுத்து, சேர்மதுரை, ராமச்சந்திரன், கிறிஸ்டோபர் வெற்றிவிஜயன், நகரச் செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் தேவா என்ற தேவதாஸ், மகேஸ்வரி, பொறியாளர் அணி பசுபதிபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com