தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

வள்ளியூரில் தி.மு.க. தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
Published on

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காவல்கிணறு விலக்கில் தனியார் திருமண மண்டபத்தில் வள்ளியூர் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் உறுப்பினர்களை ஆய்வு செய்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராதாபுரம் தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளருமான சுரேஷ் மனோகரன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிரகாம்பெல், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இளைஞரணி ஜாண் ரபீந்தர், வழக்கறிஞரணி செல்வசூடாமணி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com