தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கம்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு உள்ளார்.
தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கம்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

தி.மு.க.வில் துணை பொது செயலாளராக இருந்து வந்தவர் வி.பி. துரைசாமி. அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை அந்த பதவியில் இருந்து இன்று நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மந்திரி அந்தியூர் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுபற்றி துரைசாமி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பதவி பறிப்பு முன்பே எதிர்பார்த்த ஒன்று. என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு தெரியும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் என கூறினார்.

இன்னும் 3 நாளில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ.க. தமிழக தலைவர் முருகனை துரைசாமி சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கம் பற்றிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com