பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

தேனி அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
Published on

தேனி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரத்தை சேர்ந்தவர் ஷாலினி (23). இவர், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், எனக்கும், திருப்பூர் மாவட்டம், குமாரபாளையம் நீலாங்காளிவலசு பகுதியை சேர்ந்த சண்முகவேல் (50) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், என்னை சண்முகவேலும், அவருடைய குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்.

இதனால் நான் ஸ்ரீரெங்கபுரத்தில் உள்ள எனது தாத்தா வீட்டுக்கு வந்து விட்டேன். அதன்பிறகும் எனது கணவரின் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சண்முகவேல், அவரது தந்தை பழனிச்சாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com