திரவுபதை அம்மன் வீதியுலா

வேதாரண்யத்தில் திரவுபதை அம்மன் வீதியுலா நடந்தது
திரவுபதை அம்மன் வீதியுலா
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் ஞாயிற்றுசந்தைதோப்பு திரவுபதை அம்மன் கோவிலில் ஆண்டுத்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மகாபாரதம் கதை சொல்லுதல், படுகளம் நிகழ்ச்சி, அம்மன் கூந்தல் முடித்தல், தீ மிதித்தல் போன்றவை நடைபெற்றன. நேற்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com