போக்சோவில் டிரைவர் கைது

ஆனைமலை அருகே போக்சோவில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
போக்சோவில் டிரைவர் கைது
Published on

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது உறவினரான டிரைவர் ஒருவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொண்டால் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்று ஆசை வார்த்தை கூறி கடந்த 15-ந் தேதி சிறுமியை டிரைவர் கடத்தி சென்றார். பின்னர் திருமணம் செய்து கொண்டார். மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பிணியானார்.

இதுகுறித்து வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com