விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

விஷம் குடித்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்
விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் துரைப்பழம் (வயது 60). டிரைவர். மதுகுடிக்கும் பழக்கம் இருந்த இவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக திருச்சியில் உள்ள அவரது மகள் வீட்டில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு நோய் குணமாகவில்லை. பின்னர் ஊர் திரும்பினார். இந்தநிலையில் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து ஆயன்குளம் சக்திகோவில் முன்பு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சுடலைமணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com