

சூளகிரி
சூளகிரி அருகே உள்ள சகாதேவபுரத்தை சேர்ந்தவர் திம்மராஜ் (வயது 27). டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட திம்மராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.