கடலூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

கடலூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டா.
கடலூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
Published on

கடலூர் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராமன் மகன் பிரகாஷ் (வயது 34), டிரைவர். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று பிரகாஷ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com