திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்று (ஞாயிற்றுகிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

இதை மீறி இந்த வழிதடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com