தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை


தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
x

தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே நாளை மற்றும் வருகிற 28-ந்தேதி தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story