

ஆற்காடு தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக துரியோதனன் படுகளம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். அதன் பிறகு நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர்.