ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Published on

ஈரோடு,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்தனர். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைந்தது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தைம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com