சாத்தான் வேதம் ஓதுவது போல எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்; ஆர்.எஸ்.பாரதி


சாத்தான் வேதம் ஓதுவது போல எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்; ஆர்.எஸ்.பாரதி
x

அதிமுகவின் கண்துடைப்பு நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை

திருப்புவனம் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக்கொல்லப்பட நிலையில், நீதி கிடைக்கும் வரை, அதிமுக துணை நிற்கும் என்று அவரின் குடும்பத்தினரிடம் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், சாத்தான் வேதம் ஓதுவது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சாத்தான் வேதம் ஓதுவது போல, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார்

திருப்புவனம் கொடூரம் பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; விரைந்து கைதும் செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுப்பதும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை; இன்று அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்கள் இருண்டகால ஆட்சியில் நடைபெற்ற, சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் - பென்னீக்ஸ் இருவருமே உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்? அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா?

உங்களின் (அதிமுகவின்) கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்; இனியாவது நிறுத்திக் கொள்ளலாம்; நீதியை நிலைநாட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story