சங்பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி: கனிமொழி தாக்கு

சங்பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி: கனிமொழி தாக்கு

திருவள்ளுவருக்கு எடப்பாடி பழனிசாமி காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டதாக கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
Published on

சென்னை,

தாய் மொழி நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி உடை தரித்த வள்ளுவர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“பாஜக மீதான விசுவாசம், எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com