எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம்

மூலவர் சண்முகர் மற்றும் இதர சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம்
Published on

தூத்துக்குடி,

தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் கள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து இருந்தன.

மேற்குவங்காளத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந் ததை தொடர்ந்து, அனைத்து நிறுவனங்களும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

இதில் கலவையான முடிவுகள் வெளிவந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அ.தி.மு.க. கணிசமான இடங்களை பெறும் என்றும், த.வெ.க.வுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் அ.தி.மு.க. முன்னிலை பெறுவதாக சில கருத்து கணிப்புகளும். த.வெ.க. ஆட்சி அமையும் என்று ஒரு கருத்து கணிப்பும் கூறுகிறது.

இந்தநிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்தனர். மூலவர் சண்முகர் மற்றும் இதர சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இதனிடையே சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அர்ச்சகர்கள் வழங்கிய வேலுடன் வந்து விஜய் நேற்று சிறப்பு வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com